தன் மீது புகார்! பிரபல காமெடி நடிகர் நடிகர் எடுத்த அதிரடி முடிவு – கண்டித்த முக்கிய தயாரிப்பாளர்

தற்போது தமிழ் திரையலகில் தவிர்க்க முடியாத காமெடியனாய் வலம் வருபவர் நடிகர் யோகி பாபு. ஹீரோக்களே அவரின் கால்ஷீட்டுக்காக காத்திருக்கிறார்கள். அப்படி ஒரு உச்சத்தை அடைந்துள்ளார் யோகி பாபு.

அண்மையில் அவருக்கு மஞ்சு பார்கவி என்ற பெண்ணுடன் திருமணமானது. தற்போது யோகி பாபு 15 படங்களை கையில் வைத்துள்ளாராம்.

அண்மையில் அவர் மீது அண்மையில் மணி என்ற படத்தின் இயக்குனர் கிஷோர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார்.

யோகி பாபு டப்பிங் கொடுக்க மறுப்பதாக அவர் இந்த புகாரில் கூறியிருந்தார். இந்நிலையில் தயாரிப்பாளர் கே.ராஜன் யோகி பாபு டப்பிங் பேசாமல் இழுத்தடிப்பது கண்டிக்கத்தக்கது, டப்பிங் பேச வேண்டும் என கூறியிருந்தார்.

இந்நிலையில் யோகி பாபு படப்பிடிப்பிற்காக வெளியூரில் இருப்பதாகவும், அடுத்த மாதம் 9 ம் தேதி சென்னை வருவதாகவும் வந்து டப்பிங் பேசி முடிப்பதாகவும் கூறியுள்ளார்.

மணி படம் ஒன்றைரை ஆண்டுகளாக கிடப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!