திரையுலகில் ஆண்களுக்கும் பாலியல் தொல்லை..!! பிரபல நடிகை உருக்கம்..!!


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ராதிகா ஆப்தே.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

சினிமாவில் பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருவதாக சமீபகாலமாகவே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இது குறித்து நடிகை ராதிக ஆப்தே நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது.

பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் பாலியல் தொல்லைக்கு ஆளாகின்றனர். குறிப்பாக சினிமா உலகை பற்றி நான் பேசுகிறேன் .

இங்கு பாலியல் தொல்லைக்கு ஏராளமான ஆண்களும் உட்படுத்தபட்டிருக்கின்றனர்.

சினிமா வெளிப்படையாகிவிட்டதால் பல்வேறு பகுதிகளை சார்ந்தவர்களும் இங்கு வருகின்றனர்.

பேராசை மிக்கவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்ய தயராக இருக்கிறார்கள்.

ஒரு சிலர் வீட்டை விட்டு ஓடி வந்து சினிமாவில் வேலை செய்கிறார்கள். சினிமாவில் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தும் நபர்களின் பெயர்களை பகிரங்கமாக அறிவிப்பதில் நடிகர், நடிகைகள் மத்தியில் பயம் நிலவுகிறதா என்று கேட்டதற்கு ஆம் என பதில் அளித்துள்ளார்.

மேலும் எதிரே சமுதாயத்தில் பெரிய ஆளாக இருந்தால் என்னுடைய புகார் கவனிக்கபடாமலேயே போய்விடும் .

இவ்வாறு நடிகை ராதிகா ஆப்தே அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#