விவாகரத்திற்கு பிறகு நடிகை சோனியா அகர்வால் இப்போதைய நிலை குறித்து வெளியான தகவல்

சோனியா அகர்வால் முன்னொரு காலத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தார். அவர் காதல் கொண்டேன், தம், கோவில் , மதுர என தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து வந்தபோது இயக்குனர் செல்வராகவனை கல்யாணம் செய்துகொண்டார்.

.

அதன் பிறகு அவர் சினிமாவில் அவ்வளவாக தலை காட்டவில்லை . பின்னர் சில ஆண்டுகள் கழித்து செல்வராகவனை விவாகரத்து செய்து கொண்டார் . இவ்வாறான நிலையில் சோனியா அகர்வால் தற்போது ஒரு மலையாள படத்தில் நடித்து வருகிறார். அதற்கடுத்து விரைவில் தமிழிலும் மறு நுழைவு கொடுக்கவிருக்கிறார் . இப்போது ‘தனிமை’ என பெயரிடப்பட்டுள்ள கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படத்தில் அவர் நடிக்கவிருக்கிறார் . இதனை சிவராமன் என்பவர் இயக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் ஆரம்பமாகவுள்ளதாக தெரிகிறது


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.