27 வருடங்களுக்கு பிறகு பேட்ட, விஸ்வாசம் கடும் போட்டிக்கு நடுவே நடந்த அதிசயம்

தற்போது சமூகவலைதளங்கள் மிகவும் கார சாரமாக போய்க்கொண்டிருக்கின்றன. பேட்ட, விஸ்வாசம் என இரண்டு முக்கிய ஹீரோக்களின் படங்கள் களத்தில் விளையாடிக்கொண்டிருக்கின்றன.

இருபடங்களுக்கும் நல்ல வரவேற்பு, நல்ல விமர்சனங்கள், நல்ல வசூல் என்ற படியான நிலை தான் இருக்கின்றன. ஆனால் பேட்ட படத்தை விட விஸ்வாசம் படம் சில இடங்களில் கொஞ்சம் கூடுதலாகவே வசூல் செய்துவருகின்றது.

தமிழ்நாடு பாக்ஸ் ஆஃபிஸில் முதல் நாள் வசூல் என எடுத்துக்கொண்டால் இரண்டாம் நிலையில் தான் ரஜினிகாந்தின் பேட்ட படம் இருக்கின்றது. அஜித்தின் விஸ்வாசம் முதலில் இருக்கின்றது.

இப்படியாக இரண்டாம் இடத்தை ரஜினியின் படம் பிடித்திருப்பது 27 வருடங்களுக்கு பிறகு நடக்கும் விசயம். 1992, அக்டோபர் 25 ல் ரஜினியின் பாண்டியன் படமும், கமல்ஹாசனின் தேவர் மகன் படமும் களத்தில் இறங்கின.

இதிலும் ரஜினி படம் தமிழ்நாட்டில் முதல் நாள் வசூலில் இரண்டாம் இடத்தில் தான் இருந்ததாம்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.