பிரபல இசையமைப்பாளர் போட்ட இசையை பிரம்மாண்ட இயக்குனர் கேட்டுவிட்டு மறுத்துவிட்டாராம்.
பிரம்மாண்ட இயக்குனர் தற்போது உலகநாயகனை வைத்து ஒரு படம் இயக்கி வருகிறாராம். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம். இதற்கு ஒல்லியான இசையமைப்பாளர் இசையமைக்க ஒப்பந்தமானாராம். பட வேலைகள் முடிந்த பிறகுதான் இசையை பற்றி இயக்குனர் கேட்பார் என்று நினைத்தாராம்.
ஆனால், இயக்குனர் முன்னதாகவே கேட்க அவசரமாக இசை போட்டு கொடுத்தாராம். இதை கேட்ட இயக்குனர் நன்றாகவே இல்லை என்று கூறிவிட்டாராம். கடுப்பான இசையமைப்பாளர் தற்போது மும்முரமாக வேலை பார்க்க ஆரம்பித்திருக்கிறாராம்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!