வாரிசு நடிகரை கொல்லணும், பிரபாஸை கட்டிக்கணும்: காஜல் அகர்வால்

நடிகர் பிரபாஸை திருமணம் செய்ய விரும்புவதாக காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

காஜல் அகர்வால்நடிக்க வந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் நடிக்க வந்த புதிதில் இருந்தது போன்றே அழகாகவும், இளமையாகவும் உள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வரும் அவருக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க அவரின் பெற்றோர் விரும்புகிறார்கள். மாப்பிள்ளை பார்க்கும் வேலையை கூட துவங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

காஜலின் தங்கை நிஷாவுக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. இதையடுத்து தான் காஜலுக்கு திருமணம் செய்ய அவரின் பெற்றோர் அவசரம் காட்டுகிறார்கள்.

இந்நிலையில் காஜல் தெலுங்கு நடிகை லக்ஷ்மி மஞ்சு நடத்தும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்பொழுது லக்ஷ்மி காஜலிடம் எப்பொழுது திருமணம் என்று கேட்டார்.

தற்போதைக்கு திருமணம் எல்லாம் இல்லை என்று காஜல் பதில் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரோ, விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளேன் என்றார்.

உங்கள் வருங்கால கணவரிடம் நீங்கள் எதிர்பார்க்கும் குணாதிசயங்கள் பற்றி சொல்லுங்களேன் என்று லக்ஷ்மி கேட்டார். அதற்கு காஜல், எனக்கு கடவுள் பக்தி அதிகம். நான் எங்கு சென்றாலும் சின்ன சிவன் சிலையை கையோடு எடுத்துச் செல்வேன். அதனால் என் வருங்கால கணவர் பக்தி மிகுந்தவராக இருக்க வேண்டும். மேலும் அவர் என் மீது பொசசிவாக இருக்க வேண்டும், அன்பாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

யாரை கொல்ல, யாருடன் ஹுக் அப் செய்ய, யாரை திருமணம் செய்ய விரும்புகிறீர்கள் என்று காஜலிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், ராம் சரணை கொல்ல விரும்புகிறேன். ஜூனியர் என்.டி.ஆருடன் ஹுக் அப் செய்ய, பிரபாஸை மணக்க விரும்புகிறேன் என்று கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!