விஸ்வாசம் படம் பார்த்து கண்ணீரில் மூழ்கிவிட்டேன் முன்னணி இயக்குனர் பேச்சு

சிவா-அஜித் கூட்டணியில் இதற்குமுன் வெளிவந்த 3 படங்களை விட கடந்த வியாழக்கிழமை வெளிவந்த விஸ்வாசம் படம் ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. அதில் தந்தை-மகள் உறவு மிக உருக்கமாக இருந்தது தான் அதற்கு காரணம்.

இந்நிலையில் இந்த படத்தை பார்த்த இயக்குனர் மோகன்ராஜா தான் எமோஷ்னல் ஆகிவிட்டேன் என உருக்கமாக பேசியுள்ளார்.

படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் எனவும் அவர் கூறியுள்ளார். மோகன்ராஜா அடுத்து தனிஒருவன் 2 பணிகளில் பிசியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.