என்னுடைய முதல் காதல் நடிகர் அஜித்துடன்தான்..!! ஓபனாக சொல்லிய பிரபல நடிகை..!!


கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய் ஜோடியாக தமிழில் அறிமுகமானவர் பார்வதி நாயர். கேரளாவைச் சேர்ந்த அவர், அப்படத்தைத் தொடர்ந்து கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

இந்நிலையில், பேட்டியொன்றில், “அதில், எனது பள்ளி பருவத்தில் நிறைய பேருடன் காதல் உணர்வு ஏற்பட்டது.
ஆனால் முதல் காதல் என்றால் அது அஜித் சாருடன் தான்.


ஆனால் தற்போது அவருடனே ஒரு படத்தில் நடித்துவிட்டேன்” என மகிழ்ச்சியுடன் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமா மட்டுமின்றி, தமிழுக்கு வரும் பெரும்பான்மையான நாயகிகளின் கனவு என்றால் அது அஜித்துடன் ஒரு படத்தில் ஒரு காட்சியிலாவது நடித்துவிட வேண்டும் என்பது தான். அந்தளவிற்கு தமிழ் சினிமாவை தாண்டியும் பல நடிகைகளுக்கு அஜித் மீது ஒரு ஈர்ப்பு இருக்கிறது. தற்போது அது பார்வதி நாயரின் பேட்டி மூலம் மேலும் உறுதியாகியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!