மோசமான வார்த்தைகளால் பாடகி சின்மயியை திட்டி தீர்த்த ரசிகர்கள்..!! பரபரப்பு ட்டுவீட்..!!


#MeToo-வில் வைரமுத்து மீது பாலியல் புகார் சுமத்திய போது எந்த அளவிற்கு பாடகி சின்மயிக்கு ஆதரவு குரல் கிடைத்ததோ, அதே அளவிற்கு எப்படி கவிப்பேரரசு வைரமுத்து போன்ற தமிழுக்கு தொண்டாற்றிய புகழ்பெற்ற நபர் மீது ஆதாரமின்றி இப்படி ஒரு குற்றச்சாட்டு சுமத்தலாம் என்று எதிர்ப்பு குரலும், கண்டனங்களும் கூட எழுந்தன.

தான் ஒரு பிராமிணப் பெண் என்பதற்காக சமூக தளங்களில் என்னை திட்டியும், வசைப்படியும், கேவலமாக பேசியும் வருகிறார்கள். என் மீது சாதி ரீதியான ஒடுக்குமுறை தாக்குதல் நடக்கிறது என்று பாடகி சின்மயி தனது பல பேட்டிகளில் குறிப்பிட்டிருக்கிறார்.

இன்றைய சூழலில் ரஜினிகாந்த் – கமல் ஹாசனாக இருந்தாலுமே அவர்களது வயது, புகழ், நிலை பற்றி எதுவும் கருத்தில் கொள்ளாமல் அவர்களது சமூக தள முகவரிகளை டேக் செய்தி அசிங்கமாக பேசும், கிண்டல் செய்யும், அவதூரப் பரப்பும் பெரும் கூட்டம் இருக்கும்.


அவர்கள் கருத்திற்கு எதிர் கருத்து அல்லது, அது சரியா, தவறா என்று விமர்சனம் செய்வது வேறு, முற்றில்லுமாக அவர்களை அவமானப்படுத்த வேண்டும் என்று வார்த்தைகளால் தாக்குவது வேறு.

இங்கே, பல பிரபலங்கள் சமூக தளங்களில் இந்த வார்த்தை போர்களில் சிக்கி இருக்கிறார்கள். அதிலும், பெண் பிரபலங்களாக இருந்தால் அவர்களது உடல் மற்றும் கற்பு குறித்து மிக எளிதாக வசைப்பாடி விடுகிறது அந்த கூட்டம்.

அப்படி தான் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் வாயிலாக பாடகி சின்மயிக்கு ஒருவர் மிக வக்கிரமாக செய்தி அனுப்பி இருக்கிறார். அதில், எப்படி எல்லாம் சித்திரவதை செய்து கற்பழிப்பேன், உன்னை என்ன செய்வேன் பார் என்று வாய்க்கு வந்த படி எல்லாம் பேசி இருக்கிறார். அதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து என் இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பதிவு செய்திருக்கிறார் பாடகி சின்மயி.

பிளாக் செய்ததற்காக வக்கிரமான வார்த்தைகளில் திட்டி, பாஜக போல நீயும் நாட்டுக்கு சாபம் என்று வசைப்பாடி உள்ளார் அந்த நபர். 2016ம் ஆண்டில் இருந்து இந்த இன்ஸ்டாகிராம் பயனாளி செயற்பட்டு வருவதாக சின்மயி t அன் ஸ்டோரி அப்டேட்டில் குறிப்பிட்டிருக்கிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!