பிரபல சீரியல் நடிகைக்கு திருமணம்..!! மாப்பிளை யார்னு தெரியுமா..?


பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ரீதேவி. தற்போது சின்னத்திரையில் கல்யாணப் பரிசு, ராஜா ராணி, உள்ளிட்ட சீரியல்களில் மிகவும் முக்கிய கதாப்பதிரத்தில் நடித்து வருகிறார்.

மேலும் தெருக்களில் மிகவும் மோசமான நிலையில் சாப்பாடு இன்றி சுற்றி திரியும் நாய்களை பாதுகாக்கும் அமைப்பையும் நடத்தி வருகிறார்.

கடந்த 15 ஆண்டுகளுக்கு மேல், சின்னத்திரை மற்றும் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ள இவர் திருமணம் செய்துக்கொள்ளாமல் காலம் கடத்தி வந்தார்.


இந்நிலையில் இவர் தற்போது திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். இவருடைய திருமணம் இவரின் பிறந்த நாளான ஏப்ரல் 28 ஆம் தேதி நடந்துள்ளது. இவர் அசோக் சிந்தாரா என்கிற பெங்களூரை சேர்ந்த இளைஞரை கரம் பிடித்துள்ளார். இவர் ஐ.டி துறையில் வேலை வேலைபார்ப்பதாக கூறப்படுகிறது.

பெற்றோர் விருப்பப்படி திருமணம் செய்துக்கொண்ட ஸ்ரீ தேவியின் திருமணத்திற்கு, சின்னத்திரையை சேர்ந்த பல பாரபலங்கள் மற்றும் நண்பர்கள் கலந்துக்கொண்டு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!