நடிகை ரியாமிக்கா தற்கொலை வழக்கில் திருப்பம்.. காதலனின் வாக்கு மூலத்தால் அதிர்ச்சி..!!


குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம், எக்ஸ் வீடியோஸ், அகோரி போன்ற படங்களில் நடித்தவர், நடிகை ரியாமிகா (26). சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் 28ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவர் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரியாமிகாவின் தொலைபேசி அழைப்புகள் உள்ளிட்டவற்றை போலீசார் பரிசீலித்து வருகிறார்கள். இந்த நிலையில் அவரது காதலர் என்று கூறிக்கொள்ளும் தினேஷ் என்ற வாலிபர் தெரிவித்துள்ள தகவல் வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ரியாமிகா செல்போனுக்கு அவர் தற்கொலை செய்வதற்கு முந்தைய நாள் தொடர்பு கொண்டதாகவும், அவர் அப்போது வீட்டில் இல்லை என்று தெரிவித்ததாகவும் தெரிவித்துள்ளார் தினேஷ்.


அவர் அன்று இரவு முழுக்க எங்கே தங்கி இருந்தார் என்பதே தனது தெரியவில்லை என்று கூறும் தினேஷ், வீட்டுக்கு திரும்பிவிடுமாறு, தான் தொலைபேசியில் கூறிய போது, எல்லாம் எனக்கு தெரியும் என்று ரியாமிகா தன்னிடம் தெரிவித்ததாக கூறினார்.

ஒரு நாள் இரவு முழுக்க ரியாமிகா எங்கே தங்கியிருந்தார் என்பது மர்மமாக உள்ளதாகவும், அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்று தனக்குத் தெரியவில்லை என்றும் தினேஷ் போலீசிடம் தெரிவித்துள்ளார். இந்த தகவலை நிருபர்களிடம் கூறினார்.

பட வாய்ப்பு கிடைக்காததால் ரியாமிகா தற்கொலை செய்து கொண்டார் என்று தகவல் வெளியான நிலையில், காதலர் தினேஷ் கொடுத்துள்ள இந்த தகவல் வழக்கில் புது திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.