கஜா புயலுக்கு நிதியுதவி வழங்கிய நடிகர் சிவக்குமார் குடும்பம்..!! எவ்வளவு தெரியுமா..?


கஜா புயல் தாக்குதலால் நாகப்பட்டினம், திருவாரூா், தஞ்சாவூா் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்கள் உருக்குலைந்துள்ளன. கஜா புயல் காரணமாக இதுவரை 63 போ் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவாரூா், நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் பல குடிசைகளும், மரங்களும் சேதமடைந்துள்ளன.

இதையடுத்து புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அரசு உரிய சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், புயல் பாதித்த பகுதிகளில் அரசு சாரா தன்னார்வலா்களும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனா்.

இதனிடையே, ரஜினி, கமல், விஜய், விக்ரம், விஜய் சேதுபதி, சிவக்கார்த்திகேயன், அஜித் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் புயல் பாதித்த டெல்டா மாவட்டங்களுக்கு தங்களால் முடிந்த நிதியுதவியை அளித்துள்ளனர்.

அந்த வகையில், முதன் முதலாக கஜா புயலுக்கு நிதியுதவி செய்தது நடிகர் சிவக்குமார் குடும்பம். சிவக்குமாரின் குடும்பத்தைச் சேர்ந்த நடிகர் சூர்யா, கார்த்தி,நடிகை ஜோதிகா மற்றும் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான ‘2டி எண்டர்டெயின்மென்ட் சார்பில் ரூ.50 லட்சம் நிதியுதவி செய்தனர்.

இந்நிலையில், நடிகர் கார்த்தி கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வரும் விகடனுக்கு ரூ.20 லட்சம் காசோலையை வழங்கியுள்ளார். இதன்மூலம், அவர்கள் குடும்பம் சார்பில் மொத்தமாக ரூ.70 லட்சம் அளித்துள்ளனர். இதுதவிர, சூர்யா மற்றும் கார்த்தியின் ரசிகர்கள் கஜா புயல் பாதித்த இடங்களில் பல்வேறு மீட்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகளை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.