நடிகை கரீனா கபூர் மீண்டும் கர்ப்பமா..? வைரல் புகைப்படத்தால் அதிர்ச்சி..!!


பிரபல இந்தி பட நடிகை கரீனா கபூர். இவர் இரண்டாவது முறையாக கருவுற்றிருக்கிறார் என்று கூறி சமூக வலைத்தளங்களில் புகைப்படம் ஒன்று வைரலாகியுள்ளது. அதில் முழுக்க வெள்ளை நிறத்தில் உடை அணிந்து நிறைமாத கர்ப்பிணியாக தோற்றமளிக்கிறார் கரீனா.

இந்தப் படத்தின் உண்மைத் தன்மையை ஆராய செய்த சோதனையில் அந்தப் புகைப்படம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்டது எனத் தெரிந்துள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட படம்தான் இப்போது மீண்டும் திடீரென வைரலாகியுள்ளது. அந்த ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதிதான் கரீனா கபூருக்கு தைமுர் அலி கான் என்ற மகன் பிறந்தான். இந்நிலையில், பழைய படத்தைக் வைத்து மீண்டும் கரீனா கருவுற்றிருப்பது வதந்தி என்று தெரிந்துள்ளது.


இந்தப் படத்தை வைத்து கூகுள் மூலம் தேடியபோது, இந்தப் படம் நவம்பர் 2016ல் எடுக்கப்பட்டது தெரிந்தது. கரீனா கபூர் மும்பையில் உள்ள ரெஸ்டாரன்ட் ஒன்றிலிருந்து வெளியேறும் போது எடுக்கப்பட்ட படம் என இதே படத்தை ஏசியன் ஏஜ் செய்தி ஒன்றில் இணைத்து வெளியிட்டுள்ளது. அவருடன் சகோதரி கரிஷ்மா கபூர் மற்றும் தோழி அம்ரிதா அரோரா ஆகியோரும் உள்ளனர்.

கரீனா மீண்டும் கருவுற்றிருக்கிறார் என நம்பகமான தகவல் ஏதும் கிடைக்கவில்லை. அவரது குடும்பத்தினரும் இது பற்றிக் கூறவில்லை. இதனால், அவதூறு பரப்பும் நோக்கிய சில விஷமிகள் பழைய படத்தை போலியான செய்தி பதிவிட்டுவருகிறார்கள் எனத் தெளிவாகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.