இனியும் இந்த உலகத்தில் நான் வாழ்வதா.. வேண்டாமா..? சர்ச்சை நாயகி உருக்கம்..!!


சர்ச்சை நாயகியாக திகழ்ந்து வருபவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. தெலுங்கில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ள இவர், சினிமா துறையில் வாய்ப்பு தருவதாக கூறி, தன்னை பலர் தவறாக உபயோகித்துக் கொண்டனர் என தெலுங்கு மற்றும் தமிழ் நடிகர்கள், இயக்குநர்கள் பலர் மீதும் பாலியல் புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

அடுக்கடுக்கான இவருடைய பாலியல் புகார்கள், திரைத்துறையினரிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தனது முக நூல் பக்கத்தில் தமிழில் உள்ள முன்னணி நடிகர் தனக்கு வந்துள்ள பட வாய்ப்பை தடுக்க பார்ப்பதாக குற்றச்சாட்டு கூறியுள்ளார் ஸ்ரீரெட்டி.

ஆனால் அந்த நடிகரின் பெயரை அவர் குறிப்பிடவில்லை. அந்த நடிகர் தெலுங்கு ஹீரோக்களுக்கு நெருக்கமானவர் என மட்டும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த உலகத்தில் நான் வாழ்வதா வேண்டாமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில் ஸ்ரீரெட்டியின் சர்ச்சைக்குரிய இந்த பதிவு தமிழ் திரையுலகில் தற்போது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.