ஆபத்தான சூழ்நிலையில் உயிரை காப்பாற்றிய அஜித் – நெகிழும் சென்றாயன்..!!


பிரபல காமெடி நடிகரும், பிக்பாஸ் இரண்டாவது சீசன் போட்டியாளருமான சென்றாயன் சரியான நேரத்தில் நடிகர் அஜித் செய்த உதவி குறித்து பேசி நெகிழ்ந்திருக்கிறார்.

திரைத்துறையில் ஜூனியர் ஆர்டிஸ்டாக பணி புரிந்து, வில்லன், நகைச்சுவை என பல்வேறு கதாப்பாத்திரங்களில் அசத்தி இருந்தவர் நடிகர் சென்றாயன். இவரை பிக்பாஸ் நிகழ்ச்சியானது அனைத்து தரப்பு மக்களிடமும் மிகப் பெரிய அளவில் பிரபலபடுத்தியது.

இந்த புதிய பிரபலத்திற்கு பிறகு, பல்வேறு நேர்காணல்களில் கலந்து கொண்டு வருகிறார் சென்றாயன். அப்படி அவர் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில், “நடிகர் அஜித் பற்றிய உங்கள் கருத்து” என்ற வழக்கமான கேள்வியானது முன்வைக்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த சென்றாயன், “அப்பொழுது உன்னைக்கொடு என்னை தருவேன் படத்தில் ஜூனியர் ஆர்டிஸ்டாக நடித்து கொண்டிருந்தேன். படபிடிப்பு ஊட்டியில் நடைபெற்றது. நான் ஸ்வெட்டர் எடுத்து செல்லாத காரணத்தினால் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தேன்.

அதனை கவனித்த நடிகர் அஜித், அவரது உதவியாளரை அனுப்பி எனக்கு உடனே ஸ்வெட்டர் வாங்கி கொடுத்தார். அதன் பிறகு தான் எனக்கு உயிரே வந்தது. அது மட்டுமல்லாது அன்று என்னை போல குளிரில் தவித்த அனைத்து சிறு பணியாளர்களுக்கும் அவர் ஸ்வெட்டர் வாங்கி கொடுத்திருந்தார். உண்மையிலேயே அவர் மாபெரும் மனிதர்” என மனம் நெகிழ்ந்திருந்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!