இம்சை படத்தை கைவிடலாமா..? சிக்கலில் பிரமாணடம்..!!!


இம்சை படம் வெற்றிப்பற்றதை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை அதே அரசனை வைத்து இயக்க முடிவு செய்யப்பட்டது. இந்த படத்தை முதல் படத்தை தயாரித்த பிரமாண்ட இயக்குநர் மற்றொரு பெரிய தாயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து தாயரிக்க முடிவு செய்தார்.

ஆனால் படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலே நின்றுவிட்டது. தற்போது வரை அப்படியேதான் உள்ளது. கதையை இப்படி மாத்துங்க என படத்தின் கதை மற்றும் ஷூட்டிங் ஆகியவற்றில் இம்சை அரசன் மூக்கை நுழைத்துள்ளார். இது இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு பிடிக்கவில்லையாம்.

கோடி கணக்கில் சம்பளம் வாங்கியதோடு லட்சக் கணக்கில் பேட்டா கேட்கிறாராம். இதனால் படத்தை அப்படியே பேசாமல் ட்ராப் பண்ணிடலாமா? என பிரமாண்ட இயக்குநர் யோசித்து கொண்டிருக்கிறாராம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#