ட்விட்டரில் ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்த ராகுல் ப்ரீத் சிங்..!! எதற்காக தெரியுமா..?


தென் இந்திய மொழிகளில் பல படங்களில் நடத்துக்கொண்டிருக்கும் பிசியான நடிகை ராகுல் ப்ரீத் சிங். இவர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டுவிட்டதாக ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்.

“என் இன்ஸ்டகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டது. எனவே கணக்கு மீட்டெடுக்கப்படும் வரை, அதிலிருந்து எந்த மெசேஜ் வந்தாலும் யாரும் பதிலளிக்க வேண்டாம்.” என அவர் பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் நடிகை த்ரிஷா தனது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக ட்விட்டரிலேயே கூறியது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!