அவர்களை நம்புனது நம்ம தப்புதான்..!! பிரபல தொலைக்காட்சியை கலாய்த்த காஜல் பசுபதி..!!


தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சி இன்னும் ஓரிரு நாட்களில் முடியப் போகிறது. அப்போது வெற்றியாளர் யார் என்பது தெரிந்துவிடும்.

இந்நிலையில் பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர் காஜல் பசுபதி ட்விட்டரில் இந்த நிகழ்ச்சி பற்றி மிக கடுமையாக விமர்சித்துள்ளார்.

“இனி பிக்பாஸில் ஓட்டு போட்டு என்ன பிரயோஜனம். நிகழ்ச்சியைப் பார்ப்பவர்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றுகிறார்கள். ஏமாறுகிறவர்கள் இருக்க வரைக்கும் அவர்கள் ஏமாத்திட்டே தான் இருப்பாங்க.

அவர்களை நம்புனது நம்ம தப்புதான். இந்த நிகழ்ச்சியில் இருந்து சற்று விலகி இருப்பது தான் நல்லது” என காஜல் பசுபதி தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.