விஜய்யின் சர்க்கார் படத்தில் இப்படியொரு விஷயம் இருக்கா..? யார் சொன்னது தெரியுமா..?


தளபதி விஜய்யின் சர்கார் படம் ஷூட்டிங் முடிந்து தற்போது இறுதி கட்ட பணிகள் நடந்துவருகிறது. இது அரசியல் சம்பந்தப்பட்ட படம் என முதலில் இருந்து பேசப்பட்டு வருகிறது.

ஆனால் இது வெறும் அரசியல் படமல்ல என இந்த படத்தில் வில்லன் வேடத்தில் நடித்துள்ள நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.

“நீங்கள் சர்கார் என்ற தலைப்பை பார்த்துவிட்டு இது அரசியல் படம் என சொல்லலாம். ஆனால் அது ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு படம். இந்த அரசியல் கோமாளிகள் செய்த ஒரு விஷயத்தை எடுத்து தான் சர்கார் கதை உருவாக்கப்பட்டுள்ளது” என அவர் கூறியுள்ளார்.

மேலும் வருங்காலத்தில் விஜய் நிச்சயம் அரசியலில் குதிப்பார் என்று அவர் தெரிவித்துள்ளார். “விஜய்க்கு இன்னும் வயசிருக்கு. இன்னும் சில வருடங்கள் கழித்து கூட வரலாம்” என அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!