இனிமேல் யாரையும் பார்த்து பயம் இல்லை..!! சிவகார்த்திகேயன் ஓப்பன் டாக்..!!


சிவகார்த்திகேயன் நடிப்பில் சீமராஜா படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது.

இதில் கலந்துக்கொண்டு பேசிய சிவகார்த்திகேயன் ‘என்றுமே நான் ஒருவரையும் போட்டியாக பார்த்தது இல்லை, எனக்கு போட்டி நான் மட்டுமே.

அது தான் என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்துள்ளது, இது சாதரண இடமில்லை, இந்த இடத்திற்காகவே நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க விரும்புகின்றேன்.

மேலும், நான் யாரையும் பார்த்து பயந்ததும் இல்லை, பொறாமை பட்டதும் இல்லை’ என்று வெளிப்படையாக சிவகார்த்திகேயன் பேசியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!