நம்ம விஜய்க்கு இப்படியொரு மனசா..? மனதார பாராட்டிய பிரபல நடிகர்..!!


விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்து வருகிறார். அமெரிக்கா, சென்னை என படுவேகமாக வளர்ந்து வரும் இப்படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தில் வில்லன் கதாபாத்திரம் ஏற்றிருக்கும் பிரபல நடிகர் ராதா ரவி அவர்கள் விஜய்யுடன் பணியாற்றியதை குறித்து கூறியுள்ளார்.

அதில், ‘விக்டோரியா மஹாலில் புறாக்கள் ஆங்காங்கே அசிங்கம் பண்ணியிருந்தது, நான் கூட மேல பட்டுவிட போகிறது என உதவியாளரிடம் குடை பிடிக்க சொன்னேன். ஆனால் எவ்வளவு பெரிய ஆக்டர், எவ்வளவு பெரிய செலபிரிட்டி அவருக்கென எவ்வளவு பெரிய கேரவன் இருக்கு, ஆனால் அவர் அதெல்லாம் விட்டுட்டு ஒரு சோபாக்கு பின்னாடி தலைக்கு ஒரு பலகையை வைத்து படுத்திருந்தார், பக்கத்தில் எந்த உதவியாளரோ அல்லது வேறு யாருமே இல்லை’ என தனக்கே உரிய பாணியில் கூறினார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!