அந்த விஷயத்தை கேள்விப்பட்டதுமே ரொம்ப ஷாக் ஆயிட்டேன்..!! நடிகை த்ரிஷா உருக்கம்..!!


சென்னை அயனாவரத்தில் 12 வயது சிறுமியை 17 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் மீது வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த கொடூர சம்பவத்தில் ஈடுப்பட்டவர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 17 பேரை 15 நாள் சிறையில் அடைக்க சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பெரும் அதிர்ச்சிய ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து நடிகை த்ரிஷா கூறியதாவது, இது நிச்சயமாக கண்டிக்கப் பட வேண்டியது. அந்த சம்பவத்தைக் கேட்டு மனது உடைந்துவிட்டேன்.

இந்த மாதிரி விஷயங்கள் நடக்கும்போது மனசுக்கு ரொம்ப வேதனையா உள்ளது. குறிப்பாக அதில் குழந்தைகள் பாதிக்கப்படும்போது ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!