எங்களுக்கு இது போதும்: ஆனந்தக் கண்ணீர் விடும் சிம்பு ரசிகர்கள்

மாநாடு
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி ப்ரியதர்ஷன் உள்ளிட்டோர் நடிக்க உள்ள மாநாடு படத்தின் ஷூட்டிங் இந்த மாதம் துவங்க உள்ளது. படப்பிடிப்பு துவங்கும் தேதி பொங்கல் பண்டிகை தினத்தன்று அறிவிக்கப்படும் என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார். முதல்கட்ட படப்பிடிப்பு கோவையில் நடக்கும் என்று கூறப்படுகிறது.

வெங்கட் பிரபு, யுவன்
வெங்கட் பிரபுவும், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும் மாநாடு வேலையை துவங்கிவிட்டது. மாநாடு படத்திற்கு இசையமைக்கும் வேலையை யுவன் துவங்கிவிட்டார். யுவன், வெங்கட் பிரபு சேர்ந்து இருக்கும் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. மாநாடு இனிதே ஆரம்பம் என்று சுரேஷ் காமாட்சி ட்வீட் செய்துள்ளார்.

ரசிகர்கள் ஃபீலிங்
மாநாடு படம் நடக்குமா, நடக்காதா என்று இருந்த ரசிகர்கள் சுரேஷ் காமாட்சியின் ட்வீட்டை பார்த்து ஆனந்தக் கண்ணீர் விட்டுள்ளனர். முன்னதாக மாநாடு படத்தில் இருந்து சிம்புவை நீக்குவதாக அறிவித்தபோதும் ரசிகர்கள் கண் கலங்கினார்கள். மாநாடு என்று ஒரு படம் வந்தால் அது சிம்பு நடிப்பில் தான் வர வேண்டும் என்றார்கள். அவர்கள் விரும்பியது போன்றே நடக்கிறது.

இசை
மன்மதன், வானம் போன்று மாநாடு படத்திற்கும் சிறப்பான இசையை அளிக்குமாறு சிம்பு ரசிகர்கள் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மாநாடு அப்டேட்டுக்காக பொங்கல் வரைக்கும் காத்திருக்க வேண்டுமே என்று நினைத்தபோது இப்படி ஒரு அறிவிப்பு வெளியானதே எங்களுக்கு போதும் என்கிறார்கள் ரசிகர்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!