பிக்பாஸ் வீட்டில் கன்ஃபெஷன் ரூமுக்குள் என்ன நடந்தது தெரியுமா..? அதிர்ச்சியில் சக போட்டியாளர்கள்..!!


பிக்பாஸ் வீட்டிலிருந்து நான்காவது போட்டியாளரும் வெளியேறிவிட்டார். பாடகி ரம்யா புறம் பேசவோ சர்ச்சைக்குள்ளான மற்ற விஷயங்களிலோ தலையிட மாட்டார். ஆனால் பாலாஜி, பொன்னம்பலம், ஜனனி, ஐஸ்வர்யா மூலம் ஏதாவது ஒரு ‘கன்டென்ட்’ பிக்பாஸுக்குக் கிடைக்கும். அப்படியானவர்கள் உள்ளே இருந்தால் தான் நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருக்கும் என நினைத்த சேனல் தரப்பு, ரம்யாவை வெளியேற்றி விட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. இந்த வாரத்திற்கான நாமினேஷன் ப்ராசஸ் வெளிப்படையாக நடக்கிறது. கன்ஃபெஷன் ரூமுக்குள் அழைத்து கேட்கும் போது வரிசையாக குற்றம்சாட்டிய போட்டியாளர்கள் வெளிப்படையாக வைத்ததும் சற்றே தடுமாறுகிறார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!