பிக்பாஸில் வார நாட்களை விட வார இறுதிதான் மிகவும் சுவராசியமாக இருக்கும். இந்த வார இறுதியில் நிகழ்ச்சியில் இருந்து பாடகி ரம்யா வெளியேற்றப்பட்டார்.
இதன் பின்னர் வீட்டில் உள்ள அனைவரிடமும் உரையாடுகின்றார். இதன் போது, சென்றயனுக்கு குழந்தை இல்லை என்ற கவலையை கூறியுள்ளார். ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்குமாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தனது வாழ்வில் நடந்த சம்பவங்களையும் பகிர்ந்து கொள்ளுகின்றார்.
நடிகர் கமல் பிறக்கும் போது தாய் இறந்து விடுவார் என்று கூறியதால், பயத்தில் அவரின் தாயார் மூத்த மகனான அண்ணணுக்கு திருமணம் முடித்து வைத்து விட்டதாக கூறியுள்ளார்.
இதனால், மாமியாரும், மருமகளும் ஒரே நேரத்தில் கருத்தரிக்கும் அதிசயம் நிகழ்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிஷ்டவசமாக இவர் பிறந்து விட்டதாகவும் அண்ணியின் குழந்தை இரண்டு மாதங்களில் இறந்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதில், என்ன சுவாரஷ்யம் என்றால் கமலின் தாய் அண்ணியிடம் தன்னை ஒப்படைத்ததாகவும் இதனால் இரண்டு தாயிடம் பால் குடித்து வழர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஒருவேளை, தாய் இறந்திருந்தாலும் அண்ணிக்கு குழந்தையாகி இருப்பதாகவும் கமல் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, 10 பிள்ளைகளுக்கு உதவி செய்வதை விட ஒரு குழந்தைக்கு தாயாகி வளர்ப்பது மிக பெரிய வரம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், சென்றயனுக்கு அடுத்த வருடம் குழந்தை பிறக்கும் என்றும் அதற்கு முன்னர் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்குமாறும் தெரிவித்துள்ளார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!