தீபிகா படுகோனேவுக்கு விரைவில் திருமணம்..!! எப்போழுது தெரியுமா?


பாலிவுட்டின் பிரபல நடிகையாக திகழ்பவர் தீபிகா படுகோனே. இவர் தமிழில் கோச்சடையான் படத்தில், ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான ‘பத்மாவத்’ திரைப்படம், நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது.

வசூல் ரீதியாக பல்வேறு சாதனைகளை படைத்தது. இவரது காதல் கதை நீண்டு வந்த நிலையில், தற்போது ரன்வீர் சிங்குடன் முடிவு பெற்றுள்ளது.


வளர்ந்து வரும் நாயகர்களில் ஒருவராக ரன்வீர் சிங் நடித்துள்ளார்.

‘பத்மாவத்’ திரைப்படத்தில் வில்லனாக நடித்து, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இவர்கள் இருவரின் திருமணம் வரும் நவம்பர் மாதம் இத்தாலியில் நடக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!