தமிழில் சந்தானம் முன்னனி காமெடியனாக இருந்தார். அவர் நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பேன் என சென்றுவிட்டார். அதனால் அடுத்த இடத்தில் இருந்த சூரி முன்னனி காமெடியனானார்.
இந்நிலையில் மற்றொரு அசத்தல் காமெடியனான ‘யோகி பாபு’ கதாநாயகனாக நடிக்க வைக்க கதைகளை இயக்குனர் கொண்டுவந்துள்ளாராம்.
அதற்கு யோகி பாபு கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் எனக்கு கதாநாயகனாக வேண்டாம். ஏதாவது காமெடி கதாபாத்திரம் இருந்தாக் கொடுங்கள் தாராளமாக நடித்துக் கொடுக்கிறேன் என கூலாக கூறியுள்ளார்.
நயன்தாராவால் ஹிட் ;
தற்போது நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘கோலமாவு கோகிலா ’ படத்தின் ‘கல்யாண வயசு தான் ஆகிருச்சுடி’ பாடல் யூ டியூபில் வெளியாகி 2 மில்லியன் பார்வைகள் பெற்றன. இதனால் இந்தியாவை தாண்டி வெளிநாடுகளிலும் யோகி பாபு பெயர் பெற்றுள்ளார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!