கோடி ரூபாய் கொடுத்தாலும் அதை மட்டும் செய்ய மாட்டேன்..!! நவீனின் மனைவி கண்ணீர் பேட்டி..!!


பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமாவர் நவீன். இந்த நிகழ்ச்சியின் மூலம் பல கலைஞர்கள் உருவாகியுள்ளனர்.

இவர் கடந்த 2016-ம் ஆண்டு திவ்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் சில பிரச்னைகள் காரணமாக அவரை பிரிந்துள்ளார். இன்னும் முறையாக விவாகரத்து பெறாத சூழ்நிலையில் இன்று மலேசியாவை சேர்ந்த கிருஷ்ணகுமாரி என்பவரை திருமணம் செய்துள்ளார்.

தனது கணவரின் இரண்டாவது திருமணம் பற்றி தெரிந்து கொண்ட முதல் மனைவி திவ்யா சென்னை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதோடு நவீனுடன் தனக்கு நடந்த திருமண ஆவணங்களையும் காவல் நிலையத்தில் சமர்ப்பித்துள்ளார்.


புகாரின் பேரில் நவீனின் இரண்டாவது திருமணத்தின் வரவேற்பு நிகழ்ச்சியை நிறுத்தி அவரையும் கைது செய்துள்ளனர் போலீசார் என்ற தகவல் பரவியது. ஆனால், என்னை யாரும் கைது செய்யவில்லை, திவ்யா என்னை மிரட்டி திருமணம் செய்து கொண்டார் எனவும் விரைவில் அதனை அனைவருக்கும் நிரூபிப்பேன் என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில், முதல் மனைவி திவ்யா ” எனக்கு, நவீனுக்கு திருமணம் நடந்தது உண்மைதான். இப்போது, இரண்டாவது திருமணம் செய்துகொள்ளவதற்காக விவாகரத்து தர சொல்லி என்னிடம் பேரம் பேசுகிறார்கள். கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் விவாகரத்து கொடுக்கும் முடிவில் இல்லை என கூறியுள்ளார்.” திவ்யாவின் இந்த பேச்சுக்கு பதிலளித்துள்ள நவீன் “திவ்யாவால் என்னுடைய குடும்பத்தினர் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர். விரைவில், இந்த விஷயத்தை நான் சட்டப்படி சந்திப்பேன்” என்று கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!