தூத்துக்குடி சம்பவம்.. ‘எல்லாத்தையும் கொன்னுட்டு நல்லா இருங்க’..!! சமுத்திரக்கனி ஆவேசம்..!!


ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு எதிராக நடந்த கலவரத்தில் போலீசார் துப்பாக்கியால் சுட்டதால் பொதுமக்கள் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி திரையுலக சார்ந்த ரஜினி, கமல், சித்தார்த், ஹரிஷ் முதல் எல்லாரும் தங்களது கோபத்தையும், ஆதங்கத்தையும், வருத்தத்தையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘எல்லாத்தையும் கொன்னுட்டு நீங்க மட்டும் நல்ல இருங்க’’ என்று மறைமுகமாக தமிழக அரசை விமர்சித்து ட்விட் செய்துள்ளார்.

இயக்குனர் சமுத்திரக்கனி தமிழக மக்களிடையே நல்ல அறிமுகமானவர். மக்களுக்கு ஆதரவாக ஸ்டெர்லைட் போராட்டத்தில் கலந்து கொண்டவர் என்பது குறிப்புடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!