இரண்டு வருஷத்துக்கு பின் மீண்டும் விஜய் அவார்ட்ஸ்..!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!!


கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் விஜய் டிவி விருது வழங்கி கெளரவித்து வருகிறது . இதற்கு விழாவை நடத்தி அதில் விருது வழங்கப்படும். இதுவரை 9 முறை நடந்த இந்த நிகழ்ச்சி, கடந்த இரண்டு ஆண்டாக நடக்கவில்லை.

இந்த வருடம் 10வது ஆண்டாக இந்த விழா நடக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கே.எஸ்.ரவிக்குமார், கே.பாக்யராஜ், அனுராக் காஷ்யப், யூகி சேது, நடிகை ராதா ஆகியோர் நடுவர்களாக இருந்து விருது பெறுபவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

வரும் சனிக்கிழமை சென்னையில் இவ்விழா நடக்கவுள்ளதாக தெரிகிறது. நடிகர், நடிகைகள் உள்பட கலந்து கொள்ளும் இதில், அஞ்சலி, காஜல் அகர்வால், சயிஷா, ஹரிஷ் கல்யாண் ஆகியோரின் நடன நிகழ்ச்சியும் நடக்கவுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!