மதுமிதாவுக்கு இந்த அசிங்கம் தேவையா? என் கதையை கதைக்க அவஷியம் இல்லை.! கொதித்து பேசிய லாஸ்லியா.!


பிக்பாஸ் வீட்டில் மதுமிதா திடீரென ஆவேசம் அடைந்து ஆண்கள் பெண்களை அடக்குவதாகவும், ஆண்கள், பெண்களை அடிமைப்படுத்துவதாகவும் ஒரு புதுவித குற்றச்சாட்டை கூறி அதிர வைத்தார். சேரன் உள்பட பல ஆண் போட்டியாளர்களை ஆட்டி வைத்த மீராமிதுனை எந்த கேள்வியும் கேட்காத மதுமிதா, திடீரென ஆண்களுக்கு எதிராக பொங்கியது பார்வையாளர்களுக்கு காமெடியாக உள்ளது

இந்த நிலையில் இன்றைய அடுத்த புரமோவில் கவினை வம்புக்கு இழுக்கும் மதுமிதா, ‘உன்னை போல் நான்கு பெண்களை பயன்படுத்தி இந்த வீட்டில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி வெறுப்பேற்றுகிறார். அப்போது தர்ஷன் ‘நான்கு பெண்கள் ஒரு ஆணை சுற்றிச்சுற்றி வந்தது குறித்து ஏன் கேட்க மாட்டீறீங்க’ என்ற புத்திசாலித்தனமான கேள்விக்கு மதுமிதாவிடம் பதிலில்லை

இதனையடுத்து திடீரென பொங்கிய லாஸ்லியா இந்த சண்டையில் ஒருவழியாக குறுக்கிட்டார். பிரச்சனை இருந்தால் மக்கள் வெளியே அனுப்பிவிடுவார்கள். நான்கு பெண்களில் நானும் சம்பந்தப்பட்டிருப்பதால் நீங்கள் அதுகுறித்து தயவுசெய்து பேச வேண்டாம்’ என்று ஆத்திரமாக கூறுகிறார். மதுமிதா முற்றிலும் தனக்கு சம்பந்தமே இல்லாத ஒரு விஷயத்திற்காக பொங்கியது காமெடியாக இருப்பதாக பார்வையாளர்கள் கருத்து கூறி வருகின்றனர். மொத்தத்தில் நேற்று அபிராமியும், இன்று மதுமிதாவும் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரை பொங்க வைத்து கொண்டிருக்கும் வனிதாவின் அடுத்த டார்கெட் யாராக இருக்கும் என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.