கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களின் ஒருவர் சரவணன். இவர் பெண்களை இடிப்பதற்காகவே பேருந்தில் சென்றதாக கூறியதை காரணம் காட்டி வெளியேற்றப்பட்டார்.
சரவணன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதில் இருந்தே யாருக்கும் எவ்வித பேட்டியும் கொடுக்கவில்லை. வெளியில் தலை காட்டவும் இல்லை.
இந்நிலையில் அவர் தமிழக அரசு அளித்து கலைமாமணி விருதை தன்னுடைய மகனுடன் பெற்று கொண்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் எவிக்ஷனுக்கு பிறகு சரவணனை முதல் முறையாக பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.