இயக்குனரை செம்ம கடுப்பாக்கிய பிரபல நடிகை..!! எதனால் தெரியுமா..?


ஒல்லி நடிகரின் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ஐரின் நடிகைக்கு தமிழில் தொடர்ந்து வாய்ப்புகள் அமையாததால், அவ்வப்போது தமிழில் தலைக்காட்டி வந்தார்.

பின்னர் தெலுங்கில் பிசியாக நடித்து வந்தாராம். அங்கும் வாய்ப்புகள் குறைய, பாலிவுட்டுக்கு சென்ற நாயகிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம். கைவசம் பல படங்களை வைத்திருக்கும் நாயகி பாலிவுட்டில் சீரான அளவில் படங்கள் வருவதால் அங்கு மார்க்கெட்டை தக்கவைத்துக் கொள்ள விரும்புகிறாராம்.

இந்த நிலையில், தமிழ் இயக்குநர் ஒருவர் நாயகியிடம் கதை சொல்ல அணுகியிருக்கிறாராம். ஆனால் கதையை கேட்கவே தயாராக இல்லாத நாயகி, இயக்குநரின் ஆசையை நிராகரித்துவிட்டாராம். இதையடுத்து இயக்குநர் வேற நாயகியை தேடி வருகிறாராம்.

இருந்தாலும் நாயகிக்கு இவ்வுளவு இருக்கக் கூடாது என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்களாம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!