காதல் திருமணம் செய்துகொள்ளும் ‘ரங்கூன்’ பட இயக்குனர்..!! வாழ்த்தும் திரைப்பிரபலங்கள்..!!


ஒன்பது வருடமாக காதலித்த வந்த மாணவி ஜஸ்வினியை ‘ரங்கூன்’ பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி திருமணம் செய்யவுள்ளார்.

கௌதம் கார்த்திக் நடிப்பில் ‘ரங்கூன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ராஜ்குமார் பெரியசாமி. இவர் ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் ஆவார். இந்தப் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் தயாரித்துள்ளார்.

தற்போது இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி திருமணம் செய்துகொள்ளும் முடிவில் இருக்கிறார்.


இவர் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு விஜய் டி.வியில் ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’ என்ற நிகழ்ச்சியை இயக்கினார். அப்போது இண்டன்ஷிப் மாணவியாக வந்த ஜஸ்வினிக்கும் அவருக்கும் காதல் உருவானது. இந்த காதல் ஒன்பது வருடங்களாக தொடர்ந்து வந்தது.

தற்போது இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளும் முடிவில் உள்ளனர். இவர்களின் திருமணம் இம்மாதம் 25ம் தேதி நடைபெறவுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!