பிரபல சீரியலில் இருந்து வெளியேறினார் நடிகர் சஞ்சீவ்..!! எதற்காக தெரியுமா..?


பிரபல சீரியலான ‘யாரடி நீ மோகினி’யில் நடித்து வந்த ஹீரோ நடிகர் சஞ்சீவ் திடீரென அதிலிருந்து வெளியேறிவிட்டார்.

தற்போது சினிமாவை விட பெண்களுக்கு அதிகமான பொழுதுபோக்கு சாதனமாக இருந்து வருவது சின்னத்திரை சீரியல்கள்தான். இந்த நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் ‘யாரடி நீ மோகினி’ சீரியலில் தற்போது வரை முத்தரசன் என்ற பெயரில் ஹீரோவாக நடிதது வந்தவர் நடிகர் சஞ்சீவ்.


தற்போது இவர் சீரியலில் இருந்து திடீரென விலகிவிட்டார்.

அவர் விலகியதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது. ‘‘ஹீரோவாக நடித்து வரும் சஞ்சீவ் கதாபாத்திரம் வலுவாக இல்லையாம், அதில் இடம்பெற்றிருக்கும் வில்லி கேரக்டருக்கே கதையில் மிக முக்கிய தரப்படுவதாக கூறப்படுகிறது. இது மட்டுமின்றி இந்த இந்த சீரியல் தயாரிப்பாளருக்கும் சஞ்சீவிற்கும் இடையில் வாய் தகராறும் ஏற்பட்டதாம். தற்போது நடிகர் சஞ்சீவ்க்குப் பதிலாக நடிகர் ஸ்ரீ, முத்தரசன் கேரக்டரில் நடிக்கவுள்ளாராம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!