எனக்கும், அவருக்கும் இடையிலான உறவு புனிதமானது..!! ரகசியத்தை போட்டுடைத்த குஷ்பு..!!


ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை குஷ்பு. சரத்குமார், பிரபு, கமல்ஹாசன், ரஜினிகாந்த், கார்த்திக் என்று மாஸ் ஹீரோக்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். பிரபுவும், குஷ்புவும் இணைந்து மை டியர் மார்த்தாண்டன், சின்னதம்பி, பாண்டித்துரை, வெற்றி விழா, தர்மத்தின் தலைவன், சின்ன வாத்தியார் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். ஆனால், சின்னதம்பி படம் சூப்பர் டூப்பர் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.

1990 மற்றும் 2000ம் ஆண்டுகளில் பிரபுவும், குஷ்புவும் காதலிப்பதாகவும், இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தியதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.

ஆனால், சிவாஜி குடும்பத்தினர் காரணமாக இந்த ஜோடி பிரிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதன் பின்னர், குஷ்பு, இயக்குனர் சுந்தர் சியை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், அண்மையில், பிரபல தொலைக்காட்சி ஒன்றிற்கு குஷ்பு அளித்த பேட்டியில், கூறியிருப்பதாவது: பிரபுவுக்கும், எனக்கும் அழகான உறவு இருந்தது என்பது உண்மை தான். அது மிக அழகான தருணமும் கூட. ஆனால், ஒரு சமயத்தில் அந்த தருணம் முடிவுக்கு வந்துவிட்டது. அதற்குப் பிறகு சுந்தர் சி என்னுடைய வாழ்க்கையில் வந்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!