‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ திரைப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய கௌதம் கார்த்திக்..!!


தற்போது வெளியாகி வெற்றிநடை போட்டு வரும் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தால் நடிகர் கௌதம் கார்த்திக்கு ரசிகர்கள் மத்தியில் கெட்டப் பெயர் ஏற்பட்டுள்ளது.

கௌதம் கார்த்திக் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. இப்படம் இளைஞர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை இந்தப் படம் சுமார் 3 கோடி மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்தப் படம் கமர்ஷியலாக வெற்றியடைந்தாலும் அப்படத்தின் நாயகன் கவுதம் கார்த்திக்குக்கு கெட்ட பெயரை சம்பாதித்துக் கொடுத்துவிட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு இப்படியொரு எதிர்மறையான விமர்சனம் வரும் என்பதை முன்கூட்டியே உணர்ந்த கௌதம் கார்த்திக், ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் ஆபாச வசனங்கள் பேச மாட்டேன் என்று கூறி பல நிபந்தனைகளுடன்தான் படத்தில் நடித்தார். அப்படி கூறியவர் ஏன் இப்படியாக நடித்தார் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!