தன்னுடைய கையினால் சமைத்து அஜித்திற்கு விருந்து கொடுத்த பிரபல நடிகர்..!! யார் தெரியுமா..?


ஜின்னி மில்ஸ் பகுதியில் ‘மங்காத்தா’ படத்தின் படப்பிடிப்பு நடந்த போது, மொத்த யூனிட்டுக்கும் அஜித் தன் கையாலேயே பிரியாணி சமைத்து விருந்து வைத்தார். இதற்கு பிறகு அஜித் எந்த படத்தில் நடித்தாலும், அவர் பிரியாணி சமைத்தாரா என்பது பரவலாக கேட்கப்படும் கேள்வி.


இந்நிலையில் கௌதம் மேனன் இயக்கத்தில் ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜித் மற்றும் அருண் விஜய் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். வில்லனாக இந்த படத்தில் அறிமுகமான அருண் விஜய்க்கு ’என்னை அறிந்தால்’ ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

தற்போது நடிகர் அஜித்திற்கு அருண் விஜய் சிறப்பான விருத்து வைத்து அசத்தியிருக்கிறார். அதில் அருண் விஜய் போட்டுக்கொடுத்த ஆம்லேட்டை ருசித்து சாப்பிட்டராம் அஜித். இதுப்பற்றி ஒரு பேட்டியில் கூறிய அருண், தான் அஜித்திற்கு ஆந்திராவில் இருந்த போது சமைத்துக்கொடுத்த தகவலை தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!