பணத்திற்காக இப்படியொரு காரியத்தை செய்துடாங்களே நம்ம சமத்து நடிகை..!!


நடிகை சமந்தா தனது திருமணதிற்கு பிறகும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். முன்னதாக, திருமணத்திற்கு பிறகும் நான் சினிமாவில் நடிப்பேன் என கூறியிருந்தார் அம்மணி. அதே போல நடித்தும் வருகிறார். இந்நிலையில், பிரபல முன்னணி தெலுங்கு நடிகர் ஒருவரின் படத்தில் ஒரே ஒரு குத்துப்பாடலுக்கு ஐட்டம் நம்பராக ஆடுமாறு அழைத்துள்ளனர்.

முதலில் மறுத்த சமந்தா பிறகு ஒகே சொல்லி விட்டாராம். படத்தில் ஹீரோயினாக நடிப்பதற்கே இவருக்கு சம்பளம் 50 லட்சம் முதல் ஒரு கோடி தான்.

ஆனால், இந்த ஐட்டம் பாடலில் கவர்ச்சி நடனம் ஆடுவதற்கு மட்டும் அம்மணிக்கு 2 கோடி ரூபாய் செக் பறந்துள்ளது என கூறுகிறார்கள். இதனையடுத்து, ஒரே ஒரு பாடலுக்கு நடனமாட ஒப்புக்கொண்டிருகிறார் சமந்தா என்று கூறுகிறார்கள். ஹைதராபாத்தில் ராமோஜி ஸ்டூடியோவில் பிரமாண்ட செட்டில் இந்த பாடல் படமாக்கப்படவுள்ளது.

ஒரே ஒரு பாடலுக்கு 2 கோடி செக் கொடுத்த அந்த தயாரிப்பாளர் யார் என்று சொல்லித்தான் தெரியவேண்டுமா என்ன.?

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!