என்னுடைய மகனை பெரிய கிரிக்கெட் வீரராக்குவேன்..!! பிரபல நடிகை உறுதி..!!


தன் மகனை ஒரு மிகச் சிறந்த கிரிக்கெட் வீரராக ஆக்குவேன் என்று பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் கூறியுள்ளார்.

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கரீனா கபூர். இவர் சக நடிகர் சயீப் அலிகானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது.


தைமூர் என பெயரிடப்பட்ட அக்குழந்தையின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகியது.

அண்மையில் கரீனாவும், சயீப்பும் ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். அப்போது பத்திரிக்கையாளர்கள் அவர்களிடம் மகன் தைமூரைப் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் ‘‘தைமூரை ஒரு மிகச் சிறந்த கிரிக்கெட் வீரராக ஆக்கப்போகிறோம்’’ என்று இருவரும் பதில் கூறினார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி