ஜப்பானில் ‘பாகுபலி 2’ திரைப்படம் செய்த பிரம்மாண்ட சாதனை..!! வியப்பில் ரசிகர்கள்..!!


ஜப்பான் நாட்டில் வெளியான ‘பாகுபலி 2’ திரைப்படம் அங்கும் 100 நாட்களை கடந்து ஓடி சாதனை படைத்து வருகிறது.

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் ‘பாகுபலி 2’. இந்தப் படத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ரோகினி, சத்யராஜ், நாசர் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல மொழிகளிலும் வெளியானது. இந்தப் படம் வெளியாகி 1500 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்த முதல் இந்தியப் படம் என்ற பெருமையைப் பெற்றது.


மேலும் ‘பாகுபலி 2’ படத்தை ஜப்பானிய மொழியில் டப் செய்யப்பட்டு கடந்த வருடம் டிசம்பர் மாதம் 29ஆம் தேதி வெளியானது.

இந்தப் படம் அங்கு 100 நாட்களைக் கடந்து இன்றும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 15வது வாரத்தின் முடிவில் 1.3 மில்லியன் அமெரிக்க டாலரை ‘பாகுபலி 2’ படம் வசூலித்துள்ளது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி