ஆர்யாவின் வாழ்க்கைத் துணை இந்த பெண்தானாம்..! விரைவில் மெகந்தி நிகழ்ச்சி..!!


ஆர்யாவின் ”சிங்கிள்” வாழ்க்கை இன்னும் சில நாட்களில்முடியவிருக்கும் நிலையில் , மெகந்தி நிகழ்ச்சி வரும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

தமிழ் திரையுலகதின் முன்னனி நடிகர்களில் முக்கியமானவர் ஆர்யா. ராஜா ராணி, நான் கடவுள் உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் நடிகர் ஆர்யா தனக்கு பெண் தேடுவதாகவும் , விருப்பமுள்ளவர்தொடர்பு கொள்ளவும் என்று தனது மொபைல் எண்ணை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். முதலில் ஆர்யா இதை விளையாட்டுக்காக செய்வதாக அனைவரும் நினைத்தனர்.


ஆனால், அவர் உண்மையாகவே பெண் தேடும் முயற்சியில் இருப்பதாகவும், அவரை வைத்து ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியை பிரபல தனியார் தொலைக்காட்சி தொகுத்து வழங்கி வருகிறது. இதற்கு மாதர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தபோதும், இந்த நிகழ்ச்சி எந்த இடையூறுமின்றிநடந்து வருகிறது.

மொத்தம் 16 பெண்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அதில் தற்போது 3 பெண்கள் இறுதிச் சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.இறுதிச்சுற்றுக்கு முன்பாகமெகந்தி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அந்த நிகழ்ச்சியில் பாடகி அனுராதா கிருஷ்ணமூர்த்தி, கயல் ஆனந்தி, கிகி விஜய், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். இறுதிப் போட்டியாளர்களான சீதா லட்சுமி, சூசானா, அகதா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி