பழம்பெரும் இசையமைப்பாளர் மரணம்.. திரையுலகினர் இரங்கல்

தமிழ் திரையுலகின் பழம்பெரும் இசையமைப்பாளரும், வானொலி விளம்பரங்களுக்கு பின்னணி குரல் கொடுத்தவருமான எஸ்.வி ரமணன், வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். இவர் இசையமைப்பாளர் அனிருத்தின் தாத்தா ஆவார். இவர் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட ஆவணப்படங்களையும் தயாரித்து உள்ளார். இவரது ஆவணப்படம் ஒன்றிற்கு நடிகர் ரஜினிகாந்த் பின்னணி குரல் கொடுத்துள்ளார்.

சென்னை ஆர்.ஏ.புரத்தில் வசித்து வந்த எஸ்.வி. ரமணனனின் மறைவுக்கு ரசிகர்களும் திரைத்துறை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது இறுதிச் சடங்கு இன்று மாலை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொடர்பு கலையில் இவர் செய்த சாதனைக்காக டாக்டர் பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.



  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!