நேரடியாக ஓ.டி.டி.யில் ரிலீசாகும் அக்‌ஷய்குமாரின் 2 படங்கள்

முன்னதாக லாரன்ஸ் இயக்கத்தில் அக்‌ஷய்குமார் நடித்து இருந்த காஞ்சனா படத்தின் இந்தி ரீமேக்கான லட்சுமி படமும் ஓ.டி.டி.யில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

கொரோனா ஊரடங்கால் திரைக்கு வர தயாராக இருந்த புதிய படங்களை ஓ.டி.டி.யில் வெளியிட்டு வருகிறார்கள். முன்னணி கதாநாயகர்கள் படங்களும் ஓ.டி.டி.யில் வருகின்றன. இந்த நிலையில் அக்‌ஷய்குமார் நடித்துள்ள ‘பெல்பாட்டம்’ இந்தி படமும் ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளது.

1980-களில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்த படம் தயாராகி உள்ளது. ரஞ்சித் எம்.திவாரி இயக்கி உள்ளார். கியூமா குரோஷி, வாணி கபூர், லாரா தத்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘பெல்பாட்டம்’ படத்தை தியேட்டரில் வெளியிட முடிவு செய்து இருந்தனர். ஆனால் கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருவதால் ஓ.டி.டி.யில் வருகிறது.

இதேபோல் அக்‌ஷய் குமார் நடிப்பில் நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் உள்ள ‘சூர்யவன்சி’ படமும் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட உள்ளது. இப்படத்தை ரோகித் ஷெட்டி இயக்கி உள்ளார். இதில் அக்‌ஷய் குமாருக்கு ஜோடியாக கத்ரீனா கைப் நடித்துள்ளார். ஏற்கனவே லாரன்ஸ் இயக்கத்தில் அக்‌ஷய்குமார் நடித்து இருந்த காஞ்சனா படத்தின் இந்தி ரீமேக்கான லட்சுமி படமும் ஓ.டி.டி.யில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!