காதல் தோல்வியால் மதுவுக்கு அடிமையாகி வாழ்க்கையை தொலைத்த நடிகை..!! கண்ணீர் பக்கங்கள்..!!


எம்.ஜி.ஆர், சிவாஜி காலங்களில் முன்னணி நடிகையாக திகழ்ந்த சாவித்திரி தனது காலங்களில் கடைசி காலத்தில் மதுவுக்கு அடிமையாகி உடல் மெலிந்து கோமாவிலேயே இறந்துபோனார். இவ்வாறு நடிகை ஜமுனா அதிர்ச்சியை கிளப்பியுள்ளார்.

நாக் அஸ்வின் இயக்கத்தில் மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரி வாழ்க்கை படமாக்கப்படுகிறது. இதனை தமிழில் “நடிகையர் திலகம்” என்ற பெயரிலும், தெலுங்கில் “மகாநதி” என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில், சாவித்திரி வேடத்தில் நடிகை கீர்த்தி சுரேஷும், ஜெமினி கணேசனாக துல்கர் சல்மானும் நடிக்கின்றனர்.


இந்நிலையில் சாவித்திரியாக கீர்த்தி நடிப்பதற்கு பழம்பெரும் நடிகை ஜமுனா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நான் 200 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறேன். எனது தோழியாக இருந்த சாவித்திரியோடு நடித்தவர்களில் நான் மட்டும் தான் உயிருடன் இருக்கிறேன். சாவித்திரியை பற்றி நிறைய விஷயங்கள் தெரியும். ஆனால், என்னிடம் எதுவும் கேட்காமல் அவரது வாழ்க்கையை படமாக்குவது வேதனையாக இருக்கிறது.

இந்த படத்தில் சாவித்திரியாக நடிக்கும் கீர்த்திசுரேஷ்க்கு தெலுங்கு தெரியாது. மொழி தெரியாத அவரால் சாவித்திரி கதாபாத்திரத்துக்கு திரையில் எப்படி உயிர் கொடுக்க முடியும்? இப்போதுள்ள நடிகைகள் அரைகுறை ஆடைகளில் நடிக்கிறார்கள். ஆனால் எங்கள் காலத்தில் அப்படி இல்லை.

நானும், சாவித்திரியும் சேர்ந்து நடித்து இருக்கிறோம். எனக்கு மகன் பிறந்தபோது தொட்டிலில் போடும் விழாவுக்கு வந்திருந்த சாவித்திரி கணவர் அமைவது அவரவர் புண்ணியம். உனக்கு நல்ல கணவர் அமைந்து இருக்கிறார். ஆனால், என்னை காதல் வலையில் சிக்கவைத்து திருமணம் செய்துகொண்ட ஜெமினி கணேசன் என்னை மோசம் செய்துவிட்டார் என்று சொல்லி என்னை கட்டிப்பிடித்து அழுதார்.


நாங்கள் தடுத்தும் கேட்காமல் நீதானே விரும்பி அவரை மணந்தாய் என்று நான் ஆறுதல் சொன்னேன். சாவித்திரிக்கு சென்னையில் 3 பங்களா வீடுகள் இருந்தன. இப்போதுவரை அவரை மாதிரி சினிமாவில் எந்த முன்னணி நடிகையும் சம்பாதிக்கவில்லை. அவரது வீட்டில் நீச்சல் குளம் கட்டி இருந்தார். மைசூரில் இருந்து சந்தன கட்டைகளை வரவழைத்து பூஜை அறையை உருவாக்கி இருந்தார்.

அவ்வாறு வசதி வாய்ப்புகளோடு இருந்த அவரது சொத்துகள் அனைத்தும் எப்படியோ கரைந்து விட்டது, சாவித்திரியின் கடைசி காலத்தில் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி உடல் மெலிந்து கோமாவிலேயே இறந்துபோனார். இவ்வாறு நடிகை ஜமுனா கூறியுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!