பிரமாண்ட இயக்குனரின் அடுத்த படத்தின் ஹரோயின் இவரா..? வியப்பில் திரையுலகம்..!!


இராஜமௌலி என்பவர் புகழ்பெற்ற தெலுங்கு திரைப்பட இயக்குனராவார். இவர் இயக்குனர் கே. ராகவேந்திர ராவ் வழிகாட்டுதலின் கீழ் தொலைக்காட்சி தொடர்களை இயக்கினார் முதலில். இயக்குனரும் எழுத்தாளருமான வி. விஜயேந்திர பிரசாத் என்பவருக்கு மகனாக கருநாடக மாநிலம் ரெய்ச்சூரில் பிறந்தவர் ஆவார்.

இவரின் முதல் திரைப்படம் ஸ்டூடண்ட் நெம்பர் 1, இதை ராகவேந்திர ராவ் தயாரிக்க அவரின் உதவியாளராக இருந்த இவர் இயக்கினார். இதில் கதாநாயகனாக ஜூனியர் என் டி ஆர் நடித்தார். இதுவே ஜூனியர் என் டி ஆரின் முதல் பெரு வெற்றி படமாகும்.

பின்பு இவர் இயக்கிய அனைத்து படங்களும் வெற்றிப்படங்களாகும். ஸ்டூடண்ட் நெம்பர் 1 என்ற பெயரிலேயே இப்படம் தமிழில் எடுக்கப்பட்டது. இவரின் சிம்மாத்திரி என்ற படம் கஜேந்திரா என்று தமிழில் மீண்டும் எடுக்கப்பட்டது.


விக்கரமகுடு என்ற படம் தமிழில் சிறுத்தை என மீண்டும் படமாக்கப்பட்டது. மகாதீரா என்ற படம் மாவீரன் என தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.

அதுமட்டும் இல்லாமல் பாகுபலி என்ற மெகா ஹிட் படத்தை எடுத்து மிகவும் பிரபலமானார் இந்த படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டார்இவர் அடுத்ததாக பாக்ஸிங் குறித்து ஒரு படத்தை இயக்கவுள்ளார் இந்த படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தின் ஹீரோயினாக நடிக்க ராஷி கண்ணாவிடம் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக கூறபடுகிறது அவரும் சம்மதம் தெரிவித்துவிடுவார் போல் தெரிகிறது, இவர் தற்பொழுது ஆதர்வாவுக்கு ஜோடியாக இமைக்கா நொடிகள் படத்தில் நடித்து வருகிறார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!