காமெடி நடிகரின் குடும்பத்தில் இப்படியொரு சோகமா..? அனுதாபங்கள் தெரிவித்த பிரபலங்கள்..!!


நடிகர் சூரியின் குடும்பத்தாருக்கு ரசிகர்கள் ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூரி. தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என்று பலரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில், நடிகர் சங்கத்தைச் சேர்ந்த சினிமா பிரபலங்கள் மவுன அறவழிப் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில், காமெடி நடிகர் சூரி கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில், இது குறித்து தனது காரணத்தை டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

பெரியம்மாவின் திடீர் மரணத்தால், காவிரி பிரச்சனைக்காக நடிகர் சங்கம் நடத்தும் போராட்டத்தில் என்னால் கலந்து கொள்ளமுடியவில்லை.


ஆனால், தண்ணீர் கூட குடிக்காமல் நானு உண்ணாவிரத போராட்டம் தான் மேற்கொள்கிறேன். என்னுடைய பெரியம்மாவுக்கு சமமானவர்கள் தானே சோறாக்கிப் போட்ட அத்தனை அம்மாக்களும் என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரியம்மாவின் திடீர் மரணத்தால், காவிரிக்காக நடிகர் சங்கம் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்க முடியவில்லை. ஆனாலும், பச்சைத் தண்ணீர் கூடப் பருகாமல் நானும் உண்ணாவிரதம் மேற்கொள்கிறேன். பெரியம்மாவுக்கு நிகரானவர்கள்தானே சோறாக்கிப் போட்ட அத்தனை அம்மாக்களும்!

இதனைப் பார்த்த ரசிகர்கள் தங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளனர். மேலும், சிலர் பெரியம்மாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி