போட்டோ ஷூட் செய்த நடிகைக்கு இப்படியொரு நிலைமையா..? செம்மையா வறுத்தெடுத்த நெட்டிசன்கள்..!!


பிரபல பத்திரிகை நடத்திய போட்டோஷூட்டில் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்டார். பல்வேறு உடைகள் அணிந்து அவர் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளார்.

அந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் அவரை கலாய்த்துள்ளனர்.

இந்த புகைப்படத்தை அருமையாக போட்டோஷாப் செய்துள்ளனர். ஐஸ்வர்யாவின் கால்களை காணவில்லை. அவர் நிஜத்தை விட இதில் ஒல்லியாக உள்ளார் என்று ஒருவர் தெரிவித்துள்ளார்.

புகைப்படத்திற்காக அவர்கள் புதிய ஐஸ்வர்யா ராயை உருவாக்கியுள்ளனர்.

போட்டோஷாப்பிற்கும் ஒரு எல்லை உண்டு என்று மற்றொருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஐஸ்வர்யா ராய் மீண்டும் போட்டோஷூட்டில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி. ஆனால் அவரின் நிஜ புகைப்படங்களை பயன்படுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என நெட்டிசன் ஒருவர் கூறியுள்ளார்.

நிஜத்தை விட இந்த புகைப்படங்களில் ஐஸ்வர்யா ஒல்லிக்குச்சியாக உள்ளார். அவரின் இடுப்பு மற்றும் கால்களுக்கு என்ன ஆனது என்று ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி