படப்பிடிப்பில் திடீரென நீரில் மூழ்கிய நடிகை சமந்தா, பதறிப்போன படக்குழு- நடிகையின் தற்போதைய நிலை

நடிகை சமந்தா தென்னிந்திய சினிமா ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்படும் பிரபலம். மாடலிங் துறையில் இணைந்து முதன்முதலாக ரூ. 500 சம்பளம் வாங்கிய இவர் இப்போது கோடி கணக்கில் சம்பளம் பெற்று வருகிறார்.

இதற்கு எல்லாம் காரணமாக நடிகையின் ஓயாத உழைப்பு தான். சொந்த வாழ்க்கையிலும் இவருக்கு பிரச்சனைகள் இருந்தாலும் அதையே நினைத்து துவண்டு போகாமல் தனது கெரியரில் உச்சத்தில் உள்ளார்.

குஷி படப்பிடிப்பு
விஜய் நிர்வாணா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடிக்கும் படம் குஷி. இப்பட படப்பிடிப்பில் சமந்தா, விஜய் தேவரகொண்டா இருவரின் பிறந்தநாள் கொண்டாட்டமும் கோலாகலமாக நடந்தது.

அண்மையில் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கி உள்ளனர். அப்போது அங்குள்ள ஆற்றின் குறுக்கே இருவரும் பைக்கில் கடந்து செல்வது போன்ற சீனை காட்சிப்படுத்தி உள்ளனர்.

அப்போது எதிர்பாரா விதமாக பைக்கில் இருந்து தவறி விழுந்த இருவரும் நீரில் மூழ்கி உள்ளனர். இதைப்பார்த்து பதறிப்போன படக்குழு உடனடியாக விரைந்து இருவரையும் பத்திரமாக மீட்டுள்ளனர். இதையடுத்து சமந்தாவுக்கும், விஜய் தேவரகொண்டாவுக்கும் உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டது.

இப்படி ஒரு தகவல் வர ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்க சிலர் முற்றிலும் வதந்தி என கூறி வருகின்றனர். 
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!