சமத்து நடிகையை பார்த்து இப்படி சொல்லிட்டாங்களே..!! அப்படி என்ன செய்தார் தெரியுமா..?


பிரதியுஷா எனும் தொண்டு நிறுவனம் மூலம் சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் சமந்தா, பல குழந்தைகளுக்கு மருத்துவ உதவி புரிந்து வருகிறார். பல இதய அறுவை சிகிச்சைகளையும் நடத்தி குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.

சமந்தா தெலுங்கானா அரசின் கைத்தறி ஆடைத் தூதராகவும் செயல்பட்டு வருகிறார். கைத்தறி நெசவாளர்களின நிலையைச் சொல்லி, அவர்களின் வாழ்வியலுக்காக கைத்தறி விளம்பர தூதராக இலவசமாக நான் செயல்படுகிறேன் என்றும் சமந்தா தெரிவித்திருந்தார்.

ஆனால், எல்லா நடிகர் நடிகைகளும் போலவே இதற்காக சமந்தா பெரும் தொகையை வாங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. இந்த நிலையில், தெலுங்கானா அமைச்சர் கே.டி.ஆர் இதுபற்றி கூறுகையில், இந்த பணிக்காக சமந்தா ஒரு பைசாகூட சன்மானமாக பெறவில்லை. இதை ஒரு சமூக சேவை போன்றே இலவசமாக செய்து வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.

தெலுங்கான அமைச்சர் இதன்மூலம் சமந்தா பற்றி வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தெலுங்குதேசத்தின் மருமகளாகியிருக்கும் சமந்தாவை தெலுங்கு ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி